×

பாம்பேகேசில் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு

ஊட்டி,நவ.9: ஊட்டி ஏ.டி.சி.,யில் இருந்து பாம்பேகேசில் செல்லும் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. நீலகிரி மாவட்டம் ஊட்டி நகருக்கு அருகில் பாம்பேகேசில், எல்க்ஹில் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தனியார் பார்மஸி கல்லூரி, பிரசித்தி பெற்ற எல்க்ஹில் முருகன் கோயில், தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள், மாவட்ட தொழில் மையம் உள்ளிட்டவைகளும் அமைந்துள்ளன. இப்பகுதிகளுக்கு செல்ல ஏ.டி.சி., பகுதியில்  சாலை உள்ளது. இச்சாலை மிகவும் மேடாக அமைந்துள்ளது. இதனால் இச்சாலையில் வாகனங்கள் மிகுந்த கவனத்துடன் இயக்கப்படுகின்றன.
 சாலையில் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி பாம்பேகேசில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகன உரிமையாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : road ,Bombay ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி