×

கம்போடியாவில் மசினகுடி வாலிபர் மாயம்: மீட்டுத் தரக்கோரி நீலகிரி எம்பி ராசா கடிதம்

 

ஊட்டி, மே 4: கம்போடியாவில் காணாமல் போன வாலிபரை மீட்டுத் தரக்கோரி நீலகிரி எம்பி ராசா மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.நீலகிரி எம்பி ராசா மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, ஊட்டி அருகேயுள்ள மசினகுடி பகுதியை சேரந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் ஷீயாம் சுந்தர் என்பவர் கம்போடியாவில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

அவர் கடந்த டிசம்பர் மாதம் முதல், பெற்றோர்களுடனான தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளார். அவரது செல்போன் கடந்த டிசம்பர் மாதம் முதல் எடுக்கவில்லை. இதனால், அவரது பெற்றோர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். எனவே, கம்போடியாவில் பணியாற்றி வந்த ஷீயாம் சுந்தர் குறித்து விசாரணை மேற்கொண்டு, பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் எம்பி ராசா தெரிவித்துள்ளார்.

The post கம்போடியாவில் மசினகுடி வாலிபர் மாயம்: மீட்டுத் தரக்கோரி நீலகிரி எம்பி ராசா கடிதம் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Raza ,Union Minister of State for Foreign Affairs ,Cambodia ,Union Minister of External Affairs ,Jaishankar ,Masinagudi ,Ooty ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் நிலச்சரிவுகளை தடுக்க...