×

மனைவியுடன் உறவை கைவிட மறுத்த கள்ளக்காதலனுக்கு உருட்டுக்கட்டையால் அடி: கணவன் கைது

புழல்: சென்னை கொளத்தூர் மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் திருப்பதி(38) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி(30). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இதே பகுதியைச் சேர்ந்தவர் விமல்(38) கொத்தனார் வேலை செய்து வருகிறார். திருப்பதியும், விமலும் நெருங்கிய நண்பர்கள். எனவே, விமல் அடிக்கடி திருப்பதி வீட்டுக்கு சென்று வந்தார். இந்நிலையில், விஜயலட்சுமி, விமல் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனையடுத்து, இருவரும் திருப்பதிக்கு தெரியாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதைப்பற்றி, கேள்விப்பட்ட திருப்பதி தனது மனைவியைக் கண்டித்துள்ளார்.

ஆனாலும், விமலுடனான தகாத உறவை விஜயலட்சுமி தொடர்ந்தார். இதன் காரணமாக, கணவன் மனைவி இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக, விஜயலட்சுமி 4 மாதத்திற்கு முன்பு தனது குழந்தையுடன்  திருவண்ணாமலையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதை அறிந்த கள்ளக்காதலன் விமல் அங்கு சென்று விஜயலட்சுமி மற்றும் குழந்தையை அழைத்துவந்து, செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் வடிவேல் நகரில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். இதனைக் கேள்விப்பட்ட திருப்பதி நேற்று தனது அண்ணன் சஞ்சீவி(40)யுடன் பாடியநல்லூர் சென்றார்.

பின்னர், இருவரும் சேர்ந்து விமலை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி, விஜயலட்சுமி மற்றும் குழந்தையை அழைத்து சென்றனர். படுகாயமடைந்த விமலை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்த செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பதியை கைது செய்தனர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...