×

மாடியிலிருந்து கீழே விழுந்த மூதாட்டி பலி

புழல்: செங்குன்றம் அடுத்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மம்தா ஆயிஷா(70). இவர் கடந்த ஐந்தாம் தேதி தனது வீட்டின் மாடிபடியில் ஏறும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : terrace ,
× RELATED பெங்களூரு அருகே பேடர்ஹள்ளி பகுதியில்...