கேடிசி நகர், நவ. 6: கடையம் அருகேயுள்ள சடையப்பபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ்(47), கூலி தொழிலாளி. குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்த நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.