×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுநர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆண்டிபட்டி, நவ. 6: ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயிலில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருந்தாளுநர் சங்க மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ‘மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மருந்தாளுநர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மருந்தாளுநர்கள் மற்றும் அனைத்து மருந்தாளுநர்கள், தலைமை மருந்தாளுநர்கள், மருந்துக் கிடங்கு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,Pharmacists Association ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்