×

பாம்பு கடித்து பெண் பலி


திருப்புத்தூர், நவ. 6: திருப்புத்தூர் அருகே அரையிட்டநேந்தல்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன் மனைவி லட்சுமி (45). இவர் நேற்று வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. மயக்கமடைந்து கீழே விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED கார் மோதி 3 பேர் காயம்