புதுக்கோட்டை, நவ.6: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது-. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரெங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் பாஸ்கரன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
108 ஆம்புலன்ஸ் சேவையை ஏற்று நடத்தும் தனியார் நிர்வாகம் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் இந்த ஆண்டிற்கு தமிழக அரசு ஒதுக்கிய சம்பள உயர்வு பணத்தை தன்னிச்சையாக செயல்பட்டு கொடுக்காமல் சென்ற ஆண்டைவிட குறைவாக வழங்கியதை கண்டிக்கிறது. கொரோனா பேரிடர் காலத்தில் சேவை மனப்பான்மையுடன் களப்பணியாற்றிய ஊழியர்களை தமிழக அரசு பணபலன்களை வழங்கினாலும் அது ஊழியர்களை முறையாக அடைவதில்லை. இதனை அரசு தலையிட்டு ஊழியர்களை பாதுகாக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.