×

போலீஸ் அனுமதி மறுப்பு நாகையில் தமமுகவினர் ஆர்ப்பாட்டம்

நாகை,நவ.4: தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நாகை அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ஜீவபாரதி முன்னிலை வகித்தார். குடும்பன், காலாடி, பண்ணாடி, வாதிரியார் கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான் ஆகிய ஏழு உட்பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும். தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் இன பிரிவில் இருந்து மாற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன், நகர செயலாளர் பாரதிதாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamamukavinar ,Nagapattinam ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்