×

கூடுதல் போனஸ் வழங்க பாத்திர தொழிலாளர்கள் கோரிக்கை


திருப்பூர், நவ.4: திருப்பூர் பாத்திர தொழிலாளர்களின் தீபாவளி போனஸ் குறித்து, அனைத்து பாத்திர தொழிற்சங்கங்களின் கூட்டு கமிட்டி கூட்டம் அனுப்பர்பாளையத்தில் நடைபெற்றது. ஸ்ரீ காமாட்சி அம்மன் தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் எல்.பி.எப். ஏ.டி.பி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பி.எம்.எஸ்., எச்.எம்.எஸ்., ஆகிய தொழிற்சங்கங்களின் நீர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், செம்பு, பித்தளை, எவர்சில்வர் பாத்திர கூலி தொழிலாளர் மற்றும் பித்தளை, செம்பு தேய்க்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசாக கடந்த ஆண்டு வழங்கிய சதவீதத்தை விட கூடுதலாக வழங்க வேண்டும். பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன் வழங்க வேண்டும். போனஸ் வழங்காத தொழற்சாலை உரிமையாளரிடமிருந்து போனஸ் பெற்று தருவது என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Request utility workers ,
× RELATED திருமூர்த்தி அணை நீர்மட்டம் குறைந்தது