×

திருமருகல் அருகே வங்கியில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் திருட முயற்சி

நாகை, நவ.3: திருமருகல் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாகை மாவட்டம், திருமருகல் அருகே கங்களாஞ்சேரி செல்வபுரம் மெயின் ரோட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியின் கிளை மேலாளர் ராகுல்ரஞ்சன் கடந்த 31ம் தேதி பணியை முடித்து விட்டு வங்கியை மூடிவிட்டு சென்று விட்டார். நேற்று காலை வங்கியை வழக்கம்போல் காலையில் திறந்தனர். அப்போது மர்ம நபர்கள் வங்கியின் பின்பக்க கதவின் பூட்டை உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆனால் வங்கியின் உள்ளே நுழைந்து எவ்வித பொருட்களையும் திருடவில்லை. இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் ராகுல்ரஞ்சன் திருகண்ணபுரம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : bank ,Thirumurugal ,
× RELATED தனியார் நிதி நிறுவனங்களிடம் முதலீடு...