×

மதுரையில் போலீசாருடன் தள்ளுமுள்ளுவால் பரபரப்பு வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற காங். கட்சியினர் 50 பேர் கைது

மதுரை, நவ. 1: மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம் இருக்க போலீசில் அனுமதி கேட்டனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. எனினும் நேற்று மதுரை தல்லாகுளம் நேரு சிலை அருகே மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் காமராஜ், முருகன், நிர்வாகிகள் சுப.வெங்கட், ராஜபிரபாகரன், ராகுல், ரவி, மகளிரணி தலைவி ஷாநவாஸ் பேகம் உள்பட 50க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதை காரணம் காட்டி, மாநகர் மாவட்டத்தலைவர் கார்த்திகேயன் உள்பட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் ரிசர்வ் லைனில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags : Kang ,hunger strike ,withdrawal ,Madurai ,party ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...