×

பசுபதிபாளையம் ரவுண்டானாவில் அடிக்கடி விபத்து தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர், நவ. 1: கரூர் பசுபதிபாளையம் ரவுண்டானாவில் அடிக்கடி நடைபெறும் விபத்துக்களை தடுக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் மையப்பகுதியில் கரூர், புலியூர், தெரசா கார்னர் அகிய பகுதிகளுக்கான சாலை பிரிகிறது. சாலைகள் பிரியும் இடத்தில் சிறிய அளவில் ரவுண்டானா உள்ளது. ஆனாலும் ரவுண்டானாவை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதன் காரணமாக இந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் ரவுண்டானா வழியாக நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்களும், பேருந்துகளும் அடிக்கடி செல்வதால், வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த பகுதியில் தேவையான சீரமைப்பு ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : accidents ,Pasupathipalayam roundabout ,
× RELATED கல்பாக்கம், மதுராந்தகத்தில் நிகழ்ந்த...