×

பரமன்குறிச்சி தசரா குழு சார்பில் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவி அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வழங்கினார்


உடன்குடி, அக். 28: பரமன்குறிச்சி அருகே முந்திரித்தோட்டம், தோட்டத்தார்விளை திருவள்ளுவர் தசரா குழு சார்பில் 1000பேருக்கு நலத்திட்ட உதவிகளை அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வழங்கினார். தசரா குழுவின் தலைவர் மோசஸ் தலைமை வகித்தார். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார், உடன்குடி யூனியன் சேர்மனும், திமுக ஒன்றிய செயலாருமான பாலசிங், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலச்சங்க தலைவர் பிரேம்குமார், மாவட்ட நூலகர் மாதவன், செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், குதிரைமொழி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கன்னிமுத்து, யூனியன் கவுன்சிலர்கள் ராமலட்சுமி, மெல்சி, திமுக மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, விசிக இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட செயலர் விடுதலைச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில், மாவட்ட கவுன்சிலர் ஜெசி பொன்ராணி, திமுக மாவட்ட வர்த்தக அணி துணை இமைப்பாளர் இளங்கோ, சுகு, பால்பாண்டியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தில், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ், தசரா குழு நிர்வாகிகள் சாமத்துரை, வீரமணி, ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Anita Radhakrishnan MLA ,Paramankurichi Dasara Committee ,
× RELATED உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி...