×

கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கல் ஆறுமுகநேரியில் அதிமுக 49வது ஆண்டு துவக்க விழா சண்முகநாதன் எம்எல்ஏ, கேஆர்எம் ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

ஆறுமுகநேரி,  அக். 22: அதிமுக 49வது ஆண்டு துவக்கத்தையொட்டி ஆறுமுகநேரியில் சண்முகநாதன் எம்.எல்.ஏ., கட்சிக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் ஜெ. பேரவை மாவட்டச் செயலாளர்  கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.   
ஆறுமுகநேரியில் அதிமுக 49வது ஆண்டு துவக்கவிழா நேற்று நடந்தது. தெற்கு மாவட்டச் செயலாளர் சண்முகநாதன்  தலைமை வகித்தார். திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் ராமசந்திரன், நகரச் செயலாளர்  ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். இதையொட்டி ஆறுமுகநேரி பஜாரில் சண்முகநாதன் எம்.எல்.ஏ., கட்சிக் கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு  வழங்கினார்.

தொடர்ந்து தெற்கு மாவட்ட ஜெ பேரவை செயலாளர்  கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதி மக்களுக்கு குக்கர்  உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் துவக்கமாக முதற்கட்டமாக 40 பெண்களுக்கு  சண்முகநாதன் எம்.எல்.ஏ. குக்கர் வழங்கினார். தொடர்ந்து பேசிய தெற்கு மாவட்ட ஜெ. பேரவை  செயலாளர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்  பேரூராட்சி முழுவதும் வார்டு வாரியாக அனைத்து குடும்பத்தினருக்கும் குக்கர் வழங்கப்படும் என்றார்.

 விழாவில் மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஆழ்வை கிழக்கு ஒன்றியச் செயலாளர்  விஜயகுமார், நகரச் செயலாளர்கள் காயல்பட்டினம் மவுலானா, ஆத்தூர் சோமசுந்தரம்,  கானம் செந்தமிழ் சேகர், திருச்செந்தூர் மகேந்திரன், ஜெ. பேரவை திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் சுரேஷ்பாபு, நகர அவைத்தலைவர் மகராஜன், நகர பொருளாளர்  காசிவிஸ்வநாதன், நகர துணைச் செயலாளர் பெரியசாமி, மகளிர் அணி நகரச் செயலாளர் தயாவதி ஜோசப், இளைஞர் அணி நகரச் செயலாளர் நிவாஸ் கண்ணன், ஜெ பேரவை  நகரச் செயலாளர் காந்தி என்ற ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags : MLA ,Shanmuganathan ,AIADMK ,KRM Radhakrishnan ,Arumuganeri ,inauguration ceremony ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...