×

பகுதி நேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கலெக்டரிடம் மனு

ஊட்டி,அக்.19: குந்தா மின் உற்பத்தி வட்டத்திற்குட்பட்ட மின் உற்பத்தி நிலையங்களில் பணியாற்றி வரும் பகுதி நேர துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டாக்டர் அம்பேத்கர் பணியாளர் மற்றும் பொறியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது,இச்சத்தின் செயலாளர் கலையரசி கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, குந்தா மின் உற்பத்தி வட்டத்திற்குட்பட்ட மின் நிலையங்களில் கடந்த 17 ஆண்டுகளாக பலர் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தாழ்த்தப்பட்ட மற்றும் மலை வாழ் மக்களான இவர்கள் கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிலையில், இதுவரை முழு நேர பணியாளர்களாக மாற்றப்படாமல் உள்ளனர்.

இவர்களுக்கு இதுவரை கால முறை ஊதியம் வழங்கவில்லை. பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு பகுதி நேர துப்புரவு பணியாளர்களை முழு நேர பணியாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கலையரசி கூறியுள்ளார்.

Tags : Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...