×

டூவீலரில் புகையிலை கடத்தியவர் கைது

சாத்தூர், அக்.20: சாத்தூர் அருகே டூவீலரில் புகையிலை கடத்தியவர் கைது செய்யப்பட்டார். சாத்தூர் அருகே மேலஒட்டம்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் சாத்தூர் டவுன் போலீசார் வாகன சோதனையில் இருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 30 பாக்கெட் புகையிலை இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் இருசக்கர வாகனத்துடன் அதை ஓட்டிவந்த சிவகாசி அருகே சித்துராஜபுரத்தை சேர்ந்த கணேசன்(65) என்பவரை கைது செய்தனர்.

Tags : Tobacco smuggler ,
× RELATED உரம் பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ்