×

திருவாடானை அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீர் விரிசல்

திருவாடானை, அக்.16: திருவாடானை அருகே தொண்டி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் விரிசலால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.  இதனை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டியில் இருந்து திருவாடானை காளையார்கோயில் சிவகங்கை வழியாக மதுரைக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் அதிகளவு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இச்சாலை ஈசிஆர் சாலை உடன் இணைவதால் அதிக போக்குவரத்து நடைபெறுகிறது. இந்நிலையில் திருவாடானை பாரதி நகர் அருகில் சாலையோரத்தில் திடீரென பெரிய அளவிலான விரிசல் ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு தொலைவில் இருந்து வரும் போது இந்த விரிசல் கண்ணுக்கு தெரிவதில்லை. இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. பெரிய அளவில் அசம்பாவிதம் நிகழும் முன் இந்த விரிசலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : National Highway ,Thiruvananthapuram ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!