×

கடைக்கு சென்ற பெண் மாயம்: கணவர் புகார்

வாடிப்பட்டி, மார்ச் 18: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன் இவரது மனைவி குருவம்மாள்(43). இவர் கடந்த 6ந் தேதி இரவு 10 மணிக்கு வீட்டிலிருந்து பலசரக்கு பொருள்கள் வாங்க கடைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதன்பின் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கு சென்றார், என்ன ஆனார் என்று தெரியவில்லை. இது சம்மந்தமாக ஆனந்தன்  கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கேசவ ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : store ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!