×

சேந்தமங்கலம் அருகே சிறுமி மீது வாகனம் மோதியதால் தகராறு

சேந்தமங்கலம், மார்ச் 18: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே இச்சிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(28). கூலி தொழிலாளியான இவரது மகள் தீக்ஷா ஸ்ரீ(3). நேற்று முன்தினம் அவருக்கு பிறந்தநாள் என்பதால் விக்னேஷ் வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்தனர். அப்போது, தீக்ஷா ஸ்ரீ வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் நந்தகுமார்(19) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார். இதில், எதிர்பாராத விதமாக தீக்ஷா ஸ்ரீ மீது பைக் மோதியது.

இதனால், விக்னேஷ் மற்றும் உறவினர்கள் தட்டிக்கேட்டதால் தகராறு ஏற்பட்டது. பின்னர், கோஷ்டி மோதலாக மாறியது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இருதரப்பினர் புகாரின்பேரில், சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விக்னேஷ், முரளி, பூபதி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vehicle collision ,Chenthamangalam ,
× RELATED மயான சாலையில் கொட்டப்படும் கோழிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு