×

நீதிமன்ற உத்தரவுபடி சாலை அமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

மயிலாடுதுறை, மார்ச் 17: நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் புதிய சாலைகள் அமைக்கும் போது, பழைய சாலையை பெயர்த்து எடுத்துவிட்டு புதிய சாலை அமைக்காமல், பழைய சாலை மீதே மீண்டும் சாலை போடப்படுவது குறித்து, மயிலாடுதுறை வர்த்தகர் சங்கத் தலைவர் செந்தில்வேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கில் புதிய சாலைகள் அமைக்கும்போது பழைய சாலைகளை பெயர்த்து எடுத்த பின்னரே புதிய சாலை அமைக்க வேண்டும் என்று அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி மயிலாடுதுறையில் இம்மாதம் நடைபெற்ற சாலைப்பணிகள் அனைத்தும் முறைப்படி பழைய சாலைகளை பெயர்த்து எடுத்த பின்னரே புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாரதட்டை தெருவிலும் அதை கடைபிடிக்க அப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். வர்த்தக சங்க தலைவர் செந்தில்வேலை அழைத்து சென்று புதிதாகப் போடப்படட்டுவரும் சாலையை காண்பித்தனர்.

Tags : road ,court ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி