×

ராசிபுரம் நகராட்சி பகுதியில் 2 நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம்

ராசிபுரம்,  மார்ச் 17: ராசிபுரம் நகராட்சி பகுதியில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம்  இருக்காது என ஆணையாளர்(பொ) நடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து  ஆவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இடைப்பாடி -ராசிபுரம் கூட்டு குடிநீர்  திட்டத்திதீன் கீழ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ராசிபுரம் நகராட்சிக்கு குடிநீர் பெறப்பட்டு  வருகிறது.  கண்டர்குலமாணிக்கம் பகுதியிலிருந்து  தண்ணீர் எடுக்கப்பட்டு, ராசிபுரம் நகராட்சி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில்  ஏற்றப்பட்டு, வார்டு வாரியாக தினசரி பிரித்து அனுப்பப்படுகிறது. இடைப்பாடியில் இருந்து வரும் பிரதான குழாயில் மகுடஞ்சாவடி மற்றும் ஆட்டையாம்பட்டி பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் முடுக்கி விட்டுள்ளது. இதனால், ராசிபுரம் நகராட்சி பகுதியில் இன்றும்(17ம் தேதி) நாளையும் (18ம் தேதி) குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : drinking water supply stop ,municipality ,Rasipuram ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து