×

துபாயில் இருந்து நூதன முறையில் தங்கம் கடத்திய ஆசாமி கைது

சென்னை: துபாயில் இருந்து நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த ஆசாமியை கைது செய்து அவரிடமிருந்து 27.3 லட்சம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த காதர் மொய்தீன் (36) என்பவர் சுற்றுலா பயணியாக துபாய்க்கு சென்றுவிட்டு திரும்பி வந்தார். இவர் தான், சுங்கத்தீர்வை செலுத்தும் பொருள் எதுவும் இல்லை என கூறி கீரின் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றார். அப்போது, அவர் நடந்து சென்றபோது ஏதோ உராய்வது போன்ற சத்தம்  கேட்டது.

இதில் சந்தேகமடைந்த  சுங்க அதிகாரிகள் மீண்டும் அவரை வரவழைத்து 2 செருப்புகளையும் கழற்ற சொல்லி சோதனையிட்டனர். இதில் ஒவ்வொரு செருப்பிலும் 10, 10 தங்க துண்டுகள் ஆணி போன்று பதித்து அவைகளுக்கு வேறு நிறம் பூசப்பட்டிருந்தது தெரியவந்தது.  இந்த 20 தங்க துண்டுகளின் மொத்த  எடை 640 கிராம். இதன் மதிப்பு 27.3 லட்சம் என தெரிகிறது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தங்க துண்டுகளையும், செருப்புகளையும் பறிமுதல் செய்தனர். மிக மிக நூதன முறையில் செருப்புகள் மூலம் தங்கம் கடத்தி வந்தவர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Assami ,Dubai ,
× RELATED பாஜ ஓபிசி அணி மாநில செயலாளர்-...