×

ஆட்டோ டிரைவர் கொலை சங்கரன்கோவில் கோர்ட்டில் இருவர் சரண்

திருவில்லிபுத்தூர், மார்ச் 13: திருவில்லிபுத்தூர் அருகே கரைவளைந்தான்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(19). ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பஸ்நிறுத்தம் அருகே ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் மார்ச் 10ம் தேதி மீனாட்சிபுரம் பகுதியில் ஆட்டோவில் செல்லும் போது சிலரால் வழிறித்து அரிவாளால் ெவட்டப்பட்டார். திருவில்லிபுத்தூர் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக சங்கரன்கோவில் நடுவர் எண்2 நீதிமன்றத்தில் திருவில்லிபுத்தூரை சேர்ந்த மணிவண்ணன் என்ற பாட்சா(32), கருத்தப்பாண்டி(55) என்பவரும் சரணடைந்துள்ளனர்.

Tags : Charan ,court ,murder ,auto driver ,
× RELATED விழுப்புரம் அருகே இரண்டு பேரை கொன்ற...