×

ஆதனக்கோட்டை அருகே சாலை விபத்தில் ஒருவர் படுகாயம்

கந்தர்வகோட்டை, மார்ச் 13: கந்தர்வகோட்டை அடுத்த ஆதனக்கோட்டை அருகே பெருங்களூரில் சாலை விபத்தில் ஒருவர் கால்முறிந்து படுகாயமடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மருத்துவர்நகரை சேர்ந்தவர் இணக்கன் மகன் சுப்ரமணியன் (60). இவர் வேலை நிமித்தமாக பெருங்களூர் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது பெட்ரோல் போடுவதற்காக திரும்பியுள்ளார்.

அப்போது பின்னால் பாப்புடையான்பட்டியை சேர்ந்த செபஸ்தியார் மகன் பிரிட்டோ (29) என்பவர் ஓட்டிச்சென்ற பைக் மோதியதில் சுப்ரமணியன் கால் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பிரிட்டோவுக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ஆதனக்கோட்டை எஸ்ஐ.கனகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

Tags : road accident ,Adhanakottai ,
× RELATED ஆதனக்கோட்டை பகுதியில் கொத்து கொத்தாக காய்க்க துவங்கிய மாங்காய்