திருச்செங்கோடு, மார்ச் 13: மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்செங்கோடு டெம்பிள் ஜேசி சார்பில் சாதனை பெண்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. சங்க தலைவர் உமாரமேஷ் தலைமை வகித்தார். செயலாளர் பிரசன்ன பாலாஜி வரவேற்றார். பொருளாளர் ரேவதி ஜெகதீசன், கவிதா தினேஷ்குமரன் முன்னிலை வகித்தனர். திருச்செங்கோடு இன்னர்வீல் சங்க முன்னாள் தலைவி நவமணி கலைமணி, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். கைவினை பொருட்கள் தயாரிக்கும் சொர்ணம் மாணிக்கம், வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த விவசாயி விருதை, இயற்கை விவசாயம் செய்யும் சரஸ்வதி, சிறந்த தலைமை ஆசிரியருக்கான விருதை ஷாகிதா பானு, சிறந்த மருத்துவருக்கான விருதை அரசு மருத்துவமனை டாக்டர் சித்ராபாவை,
சிறந்த ஜேசி தேசிய பயிற்சியாளருக்கான விருது கீதா சரவணகுமார், சிறந்த தடகள வீராங்கனை விருது மாதேவ வித்தியாலயம் பள்ளி மாணவி சரண்யா ஆகியோருக்கு ஜேசி மண்டல ஒருங்கிணைப்பாளர் சபரிநாதன் வழங்கினார். விழாவில், திட்ட தலைவர்கள் புனிதா சதாசிவம், கீர்த்தனா ஜனார்த்தனன், செயலாளர்கள் காவியா பிரவீன், கீர்த்தனா கோபிநாத், முன்னாள் தலைவர்கள் ரமேஷ், தென்றல் நிலவன், சரவணகுமார், சதாசிவம், யசோதா பிரபாகரன், சந்திரசேகர், வள்ளுவன், உகநாதன், கவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சசிரேகா நன்றி கூறினார்.