குளத்தூர், மார்ச் 13: குளத்தூர் அருகே பனையூர் ஆழ்துளை கிணற்றில் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த மின்மோட்டாரை வயர்களை துண்டித்து திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். குளத்தூர் ஊராட்சி, பனையூர் கிராமம் தெற்கு பகுதியில் கண்மாயில் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டி ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் சேகரிக்கப்படும் தண்ணீர் மேல்நிலை தொட்டியில் ஏற்றி சுத்திகரித்து தெரு குழாய்கள் மூலமாக மக்களுக்கு விநியோகிக்கபடுகிறது. நேற்று முன்தினம் இரவு ஆழ்துளை கிணற்று மின்மோட்டாரை வயர்களை துண்டித்து சேதப்படுத்திய மர்மநபர்கள் மின்மோட்டாரை திருடிச் சென்றனர். இதுகுறித்து ஊராட்சி தலைவி மாலதி அளித்த புகாரின்பேரில் குளத்தூர் எஸ்ஐ செல்லத்துரை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.