குளத்தூர், மார்ச் 2: குளத்தூர் கல்லூரியில் தொழில் முனைவோர் வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது. குளத்தூர் த.மாரியப்பன் நாடார் முத்துக்கனியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி அறக்கட்டளை தலைவர் தாமஸ் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் கோபால் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் அன்பழகன் வரவேற்றார். தூத்துக்குடி துடிசியா அமைப்பின் தலைவர் நேருபிரகாஷ், பொதுச்செயலாளர் ராஜ்செல்வின், தூத்துக்குடி வெற்றி டிரஸ்ட் இயக்னர் கதிரேசபாண்டியன் ஆகியோர் தொழில் முனைவராக உயர்ந்த எண்ணங்களுடன் ஆர்வம், புதிய சிந்தனைகள், கடின உழைப்பு என பல்வேறு தலைப்புகளில் பேசினர். மேலும் புதிய தொழில் துவங்குவதற்கான வழிமுறைகள், அரசு தரப்பில் என்ன மாதிரியான உதவிகள் பெறலாம், கலுகைகள் மற்றும் இலவச ஆலோசனைகள் பெற யாரை தொடர்பு கொள்வது போன்ற மாணவர்கள் கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் கலந்துரையாடினர். வணிகவியல் துறை பேராசிரியை ஏஞ்சல்ஜெனிட்டா நன்றி கூறினார். ஏற்பாடுகளை தொழில் முனைவோர் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.