×

கூடலூர் அரசு கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கூடலூர், மார்ச் 12:  நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு கல்லூரி சார்பில், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி கூடலூர் பஜாரில் நேற்று நடந்தது.கூடலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் துவங்கிய பேரணியை கல்லூரி முதல்வர் நெடுஞ்செழியன், கூடலூர் டி.எஸ்.பி ஜெல்சிங் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.இந்த பேரணி பழைய பேருந்து நிலையம், சுங்கம் ரவுண்டனா, ஆர்.டி.ஓ. அலுவலகம் வழியாக காந்தி திடலில் நிறைவடைந்தது. இதில் இரு சக்கர வாகன பேரணி கோழிப்பாலம் அரசு கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது. இந்த பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags : Government College ,Cuddalore ,
× RELATED கோணம் அரசு பொறியியல் கல்லூரியில்...