×

கைவினைப்பொருள் கண்காட்சி

அருப்புக்கோட்டை, மார்ச் 12: அருப்புக்கோட்டை எஸ்பிகே கல்லூரியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் கைவினைப்பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடந்தது. முதல்வர் முத்துச்செல்வன் வரவேற்றார். கல்லூரி செயலாளர் சங்கரசேகரன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கண்காட்சியில் வளையல், கம்மல், கைப்பை போன்ற பொருட்களும், சேலை, சுடிதார் போன்ற ஆடை வகைகளும், பூக்கள், பழங்கள் போன்றவைகளும் வைக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை பெண்கள் மைய ஒருங்கிணைப்பாளர் தனசுபா மற்றும் உறுப்பினர்கள் சத்தியா, ப்ரித்தி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Crafts Exhibition ,
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை