×

திருப்புத்தூர் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 10 பேர் மீது வழக்கு

திருப்புத்தூர், மார்ச் 12: திருப்புத்தூர் அருகே இளங்குடியில் அனுமதியின்றி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தியதாகவும், மாடுகளை துன்புறுத்தியதாகவும் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருப்புத்தூர் அருகே இளங்குடியில்  பகசால மூர்த்தி அய்யனார் கோயில் வருஷாபிஷேக திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதில் 14 மாடுகளும் 14 குழுக்களும் போட்டியில் கலந்து கொண்டன. ஒரு குழுவில் 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றன. திருப்புத்தூர், கல்லல், காரைக்குடி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து காளைகளும், மாடுபிடி வீரர்கள் குழுக்களும் கலந்துகொண்டனர்.

இதில் அரசு அனுமதியின்றி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தியதாகவும், மாடுகளை வடத்தில் பூட்டி துன்புறுத்தியதாகவும் கூறி இளங்குடி வி.ஏ.ஓ., மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், இளங்குடியை சேர்ந்த அருன்குமார், ராமலிங்கம், பழனியப்பன் மகன் மாதவன், ராமலிங்கம் மகன் மாதவன், விக்னேஸ்வரன் மற்றும் அம்பேத்கார், சிங்கு, கருப்பையா, ராஜா, முத்து ஆகிய 10 பேர் மீது நாச்சியாபுரம் காவல் நிலைய எஸ்.ஐ., ஈஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags : persons ,Manchuvratu ,Thiruputhur ,
× RELATED பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி...