×

மேலூர் அருகே மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

மேலூர், மார்ச் 12: மேலூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து கலந்து கொண்ட மாட்டு வண்டி பந்தயங்கள் நடைபெற்றது. மேலூர் அருகே திருவாதவூரில் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 3 பிரிவுகளில் மாட்டு வண்டி பந்தயங்கள் இரண்டு நாட்களாக நடத்தப்பட்டது. திருவாதவூர் - மதுரை சாலையில் போட்டிகள் நடைபெற்றது. முதல் நாள் மாலை (மார்ச் 11) நடைபெற்ற நடு மாடுகள் பிரிவில் மொத்தம் 15 ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. இரண்டாவது நாளான நேற்று இரு பிரிவுகளில் மாட்டுவண்டி பந்தயங்கள் நடைபெற்றது. சிறிய மாடு மற்றும் பெரிய மாடுகள் பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகளும், வண்டி ஓட்டிய சாரதிகளுக்கு தனியாக சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. இப் போட்டிகளை மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.

Tags : cow car racing ,Melur ,
× RELATED மாநில செஸ் போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் சாதனை