×

பஸ்சில் 12 பவுன் நகை திருட்டு

மதுரை, மார்ச் 12: மதுரையில் தனியார் பஸ்சில் வைத்திருந்த பேக்கில் இருந்த 12 பவுன் நகையை திருடிய கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாரியம்மன் கோயில் 2வது தெருவைச் சேர்ந்த ஆனந்த் (30). இவர் கடந்த 3ம் தேதி சென்னையில் இருந்து மதுரைக்கு தனியார் பஸ்சில் வந்தார். மாட்டுத்தாவணியில் வந்து இறங்கி தனது பேக்கை எடுத்து பார்த்தபோது, பூட்டப்பட்டு இருந்த பேக் திறந்து இருந்தது. சந்தேகமடைந்து உள்ேள பார்த்தபோது, அதிலிருந்த 12 பவுன் நகையை காணவில்லை. இதுகுறித்து ஆனந்த், அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED அதிக பாரத்தால் விபத்து ஏற்படும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்