×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை ₹1.14 கோடி

திருவண்ணாமலை, மார்ச் 12: திருவண்ணாமலை அண்ணாமலையார் ேகாயில் மாசி மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கையாக ₹1.14 கோடி கிடைத்தது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து, இங்குள்ள உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசித்து விட்டு செல்கிறார்கள். பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.அதன்படி, இந்த மாத(மாசி) பவுர்ணமி கடந்த 9ம் தேதி அதிகாலை 1.50 மணிக்கு தொடங்கி, மறுநாள்(10ம் தேதி) இரவு 11.30 மணிக்கு நிறைவடைந்தது. இதையொட்டி, திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

பவுர்ணமி முடிந்ததும் அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் ஞானசேகர் முன்னிலையில் நேற்று நடந்தது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற இப்பணியில் 150 பேர் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கையாக ₹1 கோடியே 14 லட்சத்து 70 ஆயிரத்து 995ம், 310 கிராம் தங்கம், 1,050 கிராம் வெள்ளி கிடைத்தது.

Tags : Thiruvannamalai Annamaliyar Temple ,
× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்...