திருச்சுழி, மார்ச் 11:திருச்சுழியில் உள்ள கிளை பொது நூலகத்தில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு புலவர் கணேசன் தலைமை வகித்தார். ராமசாமிப்பட்டி அரசுப் பள்ளி தலைமையாசிரியர் கீதாராணி, தமிழ்பாடி அரசுப்பள்ளி ஆசிரியர் சரளா, அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாலா ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமுதி கோட்டைமேடு அரசுப்பள்ளியின் முதுகலை அறிவியல் ஆசிரியர் அழகர்சாமி வாழ்த்தி பேசினார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு கவியரங்கத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை தணிக்கை ஆய்வாளர் நாகநாதன் தலைமை வகித்து பேசினார். கவியரங்கில் சாந்தி, ராஜராஜேஸ்வரி, தங்கராஜ் உள்பட அனைவரும் கவிதை வாசித்தனர். தமிழக அரசின் நல்நூலகர் விருதுபெற்றவரும், திருச்சழி கிளை நூலகத்தின் நூலகருமான பாஸ்கரன் நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவியரும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.