×

பழைய பேருந்து நிலையம் எதிரில் மக்களின் தாகம் தீர்க்க நீர்மோர் பந்தல்: அமைச்சர் தங்கம்தென்னரசு திறந்து வைத்தார்

விருதுநகர், மே 9: விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் பழைய பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் மிகுந்த அவதியுற்று வருகின்றனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நீர்மோர் பந்தலை திறக்க திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நீர்மோர் பந்தலை திமுகவினர் அமைத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணா சிலை அருகில் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக மாவட்ட அமைப்பாளர் ராஜகுரு தலைமையில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு நீர்மோர் பந்தலை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு மோர், தண்ணீர், தர்ப்பூசணி பழங்கள் வழங்கினார். இதில், திமுக நகரத்தலைவர் தனபாலன், நகராட்சி சேர்மன் மாதவன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post பழைய பேருந்து நிலையம் எதிரில் மக்களின் தாகம் தீர்க்க நீர்மோர் பந்தல்: அமைச்சர் தங்கம்தென்னரசு திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Thangamthennarasu ,Nemor ,Virudhunagar ,Finance Minister ,Thangam Tennarasu ,Nemor Pandal ,Virudhunagar North District DMK Sports Development Team ,
× RELATED மின்சாரம் தாக்கி தொழிலாளி காயம்