×

கோவையில் கூடுதல் டி.ஜி.பி. முகாம்

கோவை, மார்ச் 11:கோவையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கண்காணிக்க கூடுதல் டி.ஜி.பி. ஜெய்ந்த் முரளி நேற்று கோவைக்கு வந்துள்ளார். கோவையில் கடந்த சில தினங்களாக இந்து முன்னணி, பா.ஜ. பிரமுகர்கள், இஸ்லாமிய இயக்க நிர்வாகிகள் தொடர்ச்சியாக மர்ம நபர்களால் தாக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டார். இதனால் கோவையில் சற்று தணிந்திருந்த பதற்றம் மீண்டும் தொற்றியுள்ளது. கோவையின் பல பகுதிகளில் அதிவிரைப்படை போலீசார், அதிரடிப்படை, மத்திய ரிசர்வ் போலீசார் உள்ளிட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பதற்றமான சூழ்நிலையை கண்காணிக்க தமிழக கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி கோவையில் முகாமிட்டுள்ளார். இதற்கிடையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜாமணி, கமிஷனர் சுமித் சரண், துணை கமிஷனர் பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் இஸ்லாமிய இயக்க நிர்வாகிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

Tags : Kovil Camp ,
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை