×

மாடு, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் வன்முறையை தூண்டும் வகையில் பேசிவரும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் முகிலன் பேட்டி

கரூர், மார்ச் 10: வன்முறையை தூண்டும் வகையில் பேசிவரும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று முகிலன் கூறினார்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மற்றும் நிர்வாகிகள் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுஅளித்தனர், பின்னர் முகிலன் கூறியது:
அனுமதியின்றி மணல்எடுப்பதை தடுக்க கோர்ட்டு உத்தரவின்படி கலெக்டர் தலைமையில் 12 பேரும், தாசில்தார் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுஅளித்தோம். ஆர்டிஓ மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மணல் கொள்ளையை தடுத்த பாலவிடுதி சப்இன்ஸ்பெக்டரை ஆளும் கட்சியினர் தாக்கியதோடு, தொடர்ந்து மணல் கொள்ளையை நடத்தி வருகின்றனர்.அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுவாகவே வன்முறையை தூண்டும் வகையிலும், இழிவுபடுத்தியும் பேசி வருகிறார். அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Rajendra Balaji ,Mukhilan ,
× RELATED மக்களவை தேர்தல்: ஐஸ் தயாரிப்பு முதல்...