×

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

தேனி, மார்ச் 10: உத்தமபாளையம் அருகே வக்கீல் ரஞ்சித்குமாரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தேனி நீதிமன்றத்தை வக்கீல்கள் புறக்கணித்தனர். உத்தமபாளையம் வக்கீல் ரஞ்சித்குமார் நிலத்தகராறு சம்பந்தமாக படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு சம்பந்தமாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தேனி வக்கீல்கள் நேற்று இரண்டாவது நாளாக கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Attorneys ,
× RELATED தமிழ்நாடு அரசின் 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் இருவர் ராஜினாமா