×

சாலையோர முட்புதர்கள் அகற்றம்

வருசநாடு, மே 11:வருசநாடு முதல் கண்டமனூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது இதனால் சாலைகளின் வளைவுகளில் விபத்துகள் தொடர்கதையானது. இதனை தொடர்ந்து சாலையோர முட்புதர்களை அகற்றும் பணிகளில், சாலை பணியாளர்கள் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர், இதனால் கடமலை – மயிலை ஒன்றிய பொதுமக்கள், வாகன ஒட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து சாலை பணியாளர்கள் கூறும்போது, ‘‘சாலையில் விபத்து எற்படும் வளைவுகளில் முட்செடிகள், நாணல்கள் அகற்றப்பட்டு எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகளிடம் சாலை விதிகளை பின்பற்றுவதுடன், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’’ என்றனர். இந்த சாலையோர முட்புதர்கள் அகற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

The post சாலையோர முட்புதர்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Kandamanur ,Dinakaran ,
× RELATED கண்டமனூர் அருகே சூறாவளி காற்றுடன் திடீர் மழை: வீட்டின் மேற்கூரை பறந்தது