×

ஆய்வு செய்த தாசில்தார் உத்தரவு பொன்னமராவதி வலையபட்டியில் ஜல்லிகள் கொட்டியும் சாலை பணி நடக்காததால் அவதி

பொன்னமராவதி, மார்ச் 6: பொன்னமராவதி பேரூராட்சியில் வலையட்டி அடைக்கன்குளத்தில் இருந்து ஊரின் மையப்பகுதியில் செல்லும் சாலைப்பணிக்காக ஜல்லிகள் கொட்டப்பட்டு சாலைப்பணிகள் நடைபெறாமல் கிடப்பதால் சாலையில் செல்வோர் சிரமத்துடன் சென்று வருகின்றனர். பொன்னமராவதி பேரூராட்சியில் உள்ள வலையபட்டி அடைக்கன்குளத்தில் இருந்து வலையர்வளவு வழியாகவும் எஸ்விஎஸ் கலா சாலை வீதி சாலையும் பொன்னமராவதி- உலகம்பட்டி மெயின் ரோட்டில் இணைகின்றன.

இதே போல தெற்குப்புறம் செல்லும் சாலை என நகரின் மையப்பகுதியில் இந்த சாலை போக்குவரத்துக்கு சென்று வர முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக கிடந்தது. இப்போது இநத சாலை மேம்பாடு செய்யும் பணி நடக்கின்றது. இது ஆமை வேகத்தில் நடக்கின்றது. தற்போது சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் கொட்டி நீண்ட நாட்களாக கிடக்கின்றது. இதனால் இந்த சாலைகள் வழியாக போக்குவரத்துக்கு சென்று வர முடியாத அளவிற்கு மிகவும் மோசமாக உள்ளது. எனவே இந்த சாலைப்பணிகளை விரைந்து முடித்து நல்ல போக்குவரத்துக்கு சென்று வரும் சாலையாக போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Dasildar ,ponamaravati vetipatti inspections ,road jelly jealousy road ,
× RELATED தேர்தல் பறக்கும் படை சோதனை:...