×

ஆலங்குடியில் சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் கைது

புதுக்கோட்டை, மார்ச் 6: ஆலங்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கலைஞர் காலனியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(28). எலக்ட்ரீசியனான இவர், அந்த பகுயில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது பெற்றோர் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து விசாரணை செய்த போலீசார், ராஜமாணிக்கத்தின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Alangudi ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ,...