×

புதுக்கோட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை மீட்பு

கறம்பக்குடி, மார்ச் 6: புதுக்கோட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை உயிருடன் மீட்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் முஹம்மதுபிர்தோஸ். இவர் சொந்தமாக ஜல்லிக்கட்டு காளை வைத்து வளர்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் ஆலங்குடி அருகே நடை பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு தனது காளையை கொண்டு சென்றுள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட காளை பிறகு வேகமாக ஓடி வந்து கொத்தக் கோட்டை கிராமத்தில் வயல் வெளியில் உள்ள 30 அடி ஆழம் கொண்ட தண்ணீர் நிரம்பிய கிணற்றில் விழுந்து விட்டது. இது குறித்து ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி ஜல்லிக்கட்டு காளையை உயிருடன் மீட்டு காளை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதையொட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் வீரர்களை காளை உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Tags : Pudukkottai ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...