×

கவிதாஸ் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையே விளையாட்டு போட்டிகள்

திருச்செங்கோடு,  மார்ச் 6: வையப்பமலை கவிதாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை  மற்றும் நிர்வாகம் துறை சார்பில், கல்லூரிகளுக்கிடையே பல்வேறு போட்டிகள்  நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தாளாளர்  செந்தில்குமார் தலைமை  வகித்தார். கல்லூரி தலைவர்  பழனியப்பன், செயலாளர்  கவிதா செந்தில்குமார்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நாமக்கல் எஸ்எஸ். அக்ரோ  டெக் நிறுவனர் ரெஸ் கிறிஸ்டி ராஜ் கலந்து கொண்டார். மூன்றாமாண்டு மாணவர் கோவலன் வரவேற்றார். சிறப்பு  விருந்தினர் ரெஸ் கிறிஸ்டி ராஜ்  பேசுகையில், மாணவப் பருவம் பல்வேறு  சிந்தனைகள், துறை சார்ந்த கருத்துகள், அடிப்படை கோட்பாடுகளை கற்றுக்கொள்ள  மிகச் சிறந்த பருவம் ஆகும். பல்வேறு சிறப்பு  அறிஞர்களிடத்தில் ஆராய்ச்சி பற்றிய குறிப்புகளை துறை உதவியுடன் கேட்டு  தெரிந்து கொள்ள வேண்டும். ஆராய்ச்சி நடவடிக்கைகளை தானாக முன்வந்து,  மாணவர்கள் படிக்கும் போதே மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றார். முதலாமாண்டு மாணவர் பாண்டி சரவணன் நன்றி கூறினார்.

Tags : Sports Competitions ,Colleges ,Kavidas College ,
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...