×

வடக்குத்து கிராமத்தில் மூடி கிடக்கும் நூலகத்தை திறக்க வேண்டும்

நெய்வேலி, மார்ச் 6: நெய்வேலி அடுத்த வடக்குத்து ஊராட்சியில் சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வடக்குத்து கிராம நிர்வாக அலுவலகம் அருகில் அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில்  கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கிளை நூலகம் தற்போது செயல்படாமல் மூடியே கிடக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த நூலகம் செயல்பட்டபோது, தினமும் ஏராளமான  வாசகர்கள் வந்து படித்து விட்டு சென்றனர்.

மேற்கொண்ட நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் படித்து பயனடைந்து வந்தனர்.இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நூலகம் மூடியே கிடப்பதால் செய்தித்தாள்கள், புத்தகங்கள் மக்கி வீணாவதால் கரப்பான் பூச்சிகள் அரித்து வீணாகி வருகிறது. மேலும் செய்தித்தாள்கள், புத்தகங்கள் படிக்க பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள என்எல்சி பொது நூலகம் சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, வடக்குத்து கிளை நுலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : library ,village ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு