×

புதுப்பெண் திடீர் மாயம்

திருமங்கலம், மார்ச் 6: திருமங்கலம் அருகே திருமணமாகி 8 மாதத்தில் புதுப்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் அடுத்துள்ள பள்ளக்காபட்டியை சேர்ந்தவர் விக்ரம். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜோதிமலர்(19). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்களாகிறது. கப்பலூர் சிட்கோவில் ஜோதிமலர் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்ற ஜோதிமலர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடக்கவில்லை. கணவர் விக்ரம் கொடுத்த புகாரில் திருமங்கலம் டவுன் போலீசார் புதுப்பெண் ஜோதிமலரை தேடிவருகின்றனர்.

Tags : Freshman ,
× RELATED கிணற்றில் புதுப்பெண் சடலம் ஆர்டிஓ விசாரணை