×

திருமணம் செய்துகொள் என மாணவியை மிரட்டிய வாலிபர் கைது

திருமங்கலம், ஏப். 28: திருமங்கலம் அருகேயுள்ள ஒரு கிராமத்தினை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த நிலையில் தற்போது தேர்வுகளை எழுதியுள்ளார். இவர் தனது தோழியின் அண்ணனான கரிசல்பட்டியை சேர்ந்த அழகுபாண்டி (19) என்பவருடன் சகஜமாக பழகியுள்ளார். இதனை தவறாக எடுத்து கொண்ட அழகுபாண்டி, மாணவி தேர்வு எழுத பள்ளிக்கு வந்த சிறுமி வழிமறித்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்கவே அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் சிறுமியின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்ற வாலிபர் அழகுபாண்டி, மகளை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி பெற்றோரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாாில் திருமங்கலம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து அழகுபாண்டியை கைது செய்தனர்.

The post திருமணம் செய்துகொள் என மாணவியை மிரட்டிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Karisalpatti ,
× RELATED திருமங்கலம் பகுதியில்...