×

கோழிப்பண்ணையில் வடமாநில தொழிலாளி சாவு

கிருஷ்ணகிரி, மார்ச் 5: கெலமங்கலம் அருகே உள்ள கோட்டட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில், சட்டீஸ்கர் மாநிலம் பில்காண்ட் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்குமார்(45) என்பவர், தனது குடும்பத்தினருடன் தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி ராஜேஷ்குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, ராஜேஷ்குமார் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஜூலி கொடுத்த புகாரின் பேரில், கெலமங்கலம் எஸ்ஐ செல்வராகவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Northland worker ,poultry farm ,
× RELATED அதிமுக ஆதரவாளருக்கு சொந்தமான...