×

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி, மார்ச் 5: உசிலம்பட்டியில் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்க கோரி, போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு, 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் சிஐடியூ ஆசைத்தம்பி, எல்பிஎப் குருசாமி, ஆகியோர் தலைமையில், எல்பிஎப் ஜீவானந்தம், பாண்டி, சிஐடியூ சிவக்குமார், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  

ஆர்ப்பட்டத்தில் சிறப்பு பேச்சாளராக மதுரை மாவட்ட ஏஐடியூசி பொதுசெயலாளர் நந்தாசிங் கலந்து கொண்டார். இதன் மூலம் வருகின்ற மார்ச் 10ந் தேதி, மதுரை அரசு தலைமை போக்குவரத்து கழக பணிமனையின் முன்பு 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அனைத்து தொழிற்சங்களை அழைத்து பேசக்கூறி காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தனர். போக்குவரத்து தொழிலாளர்களின் ஏழ்மையையும், பணிச்சுமையை கருத்தில் கொண்டு தொழிலாளர்களின் முன்னேற்றம் குறித்து 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைக்க வேண்டும் எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags : transport workers ,
× RELATED வெயிலில் இருந்து போக்குவரத்து...