×

மக்கள் கோரிக்கை ஆலங்குடி- புதுக்கோட்டைக்கு கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்

புதுக்கோட்டை, மார்ச்5 : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியிலிருந்து காலை, மாலை நேரங்களில் பஸ்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆலங்குடியிலிருந்துபுதுக்கோட்டைக்கு தொடர்பேருந்து இயக்கவேண்டும்என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்துஅரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்லும்நோயாளிகள் என ஏராளமானோர் தினமும் காலைநேரங்களில் புதுக்கோட்டைக்கு செல்கின்றனர்.

அதேபோலமாலை நேரங்களில் புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடிக்கு வருகின்றனர். ஆனால் இவர்கள் சென்றுவரபோதிய பஸ்வசதி இல்லை. இந்நிலையில், ஆலங்குடியிலிருந்து மழையூர் வழியாக கறம்பக்குடி செல்லும் பேருந்துகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அதிக அளவில் பஸ்சின் மேற்கூரையில்அமர்ந்தும், படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்கின்றனர்.இதனை ஆலங்குடியின் பல்வேறு பகுதிகளில் நிற்கும் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதே இல்லை.மேலும், கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் என பேருந்தில் செல்லும் அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் எந்த நேரத்திலும்அசம்பாவிதங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஆலங்குடியில் போக்குவரத்து பணிமனை திறக்கப்பட்டது. அப்போது அதிக எண்ணிக்கையிலான பஸ்கள் பல்வேறு வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்பட்டன. அதனால், ஆலங்குடியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவரும் நிம்மதியடைந்தனர். ஆனால், தற்போது குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. . மேலும், இந்த பேருந்து பணிமனையில் உள்ள பேருந்துகளை முறையாக பராமரித்து வழித்தடத்தில்தொடர்பேருந்து இயக்கவேண்டும் என்று சம்மந்தப்பட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆலங்குடி போக்குவரத்து பணிமனையில் பல வழித்தடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் நாளடைவில் படிப்படியாக குறைத்து வருகின்றனர். இதனால், கிராமப்புறங்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் தினம்தினம் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தனியார் பேருந்துகளில் படிக்கட்டுகளிலும், மேற்கூரையிலும் அமர்ந்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து பணிமனை மேலாளரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவிதநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், நாளுக்குநாள்அதிகரித்துவரும் கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில்காலை, மாலை நேரங்களில் மட்டுமாவது இப்பகுதியில்தொடர்பேருந்து இயக்க சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Tags : Alangudi-Pudukkottai ,
× RELATED பாப்பான்விடுதியில் ஜல்லிக்கட்டு: 800 காளைகள் அமர்க்களம்